ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்

விபத்துகளிலிருந்து உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸில் ஆந்திராவில் கஞ்சா கடந்த பயன்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில், கதாநாயகி தனது அம்மாவுக்கு  உடல் சரியில்லாததால்  மருத்துவமனைக்கு  அழைத்து செல்வது போல வண்டியில் கோகோயின் போதை பொருளை கடத்தி செல்வார். இதேபோன்ற நிகழ்வு தற்போது ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில் நோயாளிகள் போன்று கஞ்சா மூட்டைகளை கடத்தியுள்ளார் மார்சல் ராஜா என்பவர். இவர் ஒரு அம்புலன்ஸ் ஓட்டுநர். இவர் ஆந்திராவுக்கு ஆம்புலன்ஸில் சென்று, பின் அதே ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை நாகையில்  நல்லியான் தோட்டம் என்ற பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டதை   பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த 200 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *