படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேரின் ரிசல்ட் ரத்து … சென்னை பல்கலைக்கழகம் ஆக்ஷன் !
படிக்காமலே பட்டம் பெற முயன்ற 117 பேர் முடிவுகள் ரத்து செய்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
எந்த பட்டப்படிப்பிலும் சேராமல் ஆன்லைன் தேர்வு வாயிலாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 1980 ம் ஆண்டு முதல் அரியர் வைத்தவர்கள் தேர்வெழுத 2020 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றதாகவும், தொலைத்தூர கல்வி நிறுவனங்கள் தலா ரூ. 3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு உதவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல், வேறுயாரும் பட்டம் பெற முயற்சி செய்து இருக்கிறார்களா என்ற அடிப்படையில் ஆய்வு நடத்த விசாரணைக்குழு அமைத்து துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.