பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு..!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மாநில அரசு ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.