அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த அதிரடி முடிவு.. 41 எம்.பி.க்களுடன் திடீர் சந்திப்பு..!!

இலங்கை அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த 41 எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.  இடைக்கால அரசு அமைக்க போவதாக  பொதுஜன பெருமுனை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரும் கோரிய நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர்  கோத்தபய ராஜபக்சே முன்வந்துள்ளார். 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு தான் காரணம் என்றும் அதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு பொறுப்பேற்று அரசு பதவியை விட்டு  விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் வருகிறது.  

இந்த பொருளாதார நிலைமையைச் சமாளிக்கும் திறன் கொண்ட வேறு ஒரு அமைப்பிடம், கோத்தபய ராஜபக்சே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் அதிபர்  பதவி விலகக் கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் இலங்கையில் வெடித்து வருகின்றன.

ஆனால் அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பும்  26 அமைச்சர்கள் பதவி விட்டு விலகி பேரும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆட்சியை தக்கவைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரிடம் அதிபர்  பேச்சுவார்த்தைநடத்தப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியானது இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *