அதிபர் இல்லாத அமைச்சரவை..! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு..!!!
பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் அதிபர் ஆரிப் ஆல்வி பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஏப்ரல் 10ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதை அடுத்து இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சியினர் ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்த வெற்றி சிலரின் சதி செயலால் நடந்துள்ளது என அமெரிக்காவை கடுமையாக குற்றம் சாட்டி பேசியிருந்தார் இம்ரான் கான்.
இந்நிலையில் ஷாபாஸ் ஷெரீப் முன்னிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இடம்பெறும் வகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவானது திங்கட்கிழமை(நேற்று ) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அதிபர் ஆரிப் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்த நிலையில் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விழாவானது இன்று (செவ்வாய்க்கிழமை ) ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்பு விழாவிலும் அதிபர் ஆரிப் ஆல்வி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு உண்டானது. அதிபர் ஆரிப் ஆல்விவை யாரோ பின்புறம் இருந்து இயக்கி வருகிருகிறார்கள் என பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவர் சாதிக் சஞ்ரணி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.