என் தங்கச்சி உங்கள ரொம்ப பிடிச்சியிருக்கு… மேட்ரிமோனி மூலம் நூதன மோசடி செய்த நபர் கைது!
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு வித்தியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு பச்சையப்பனுக்கும் வித்தியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.அதனால் மனைவியைப் பிரிந்து கனடாவில் வசித்து வந்துள்ளார் பச்சையப்பன்.
இதற்கிடையே இருவரும் பிரிந்தது தொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமாதானமான நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பச்சையப்பன் அவரின் மனைவியை பிரிந்து வாழ்ந்த வந்த போது. கடந்த 2020ம் ஆண்டு மறுமணம் செய்ய மேட்ரிமோனியில் ஆன்லைன் மூலமாக விவாகரத்து மற்றும் விதவை பெண் வேண்டும் என திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெரம்பூரை சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் இணையத்தில் பச்சையப்பன் கொடுத்த கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தனது தங்கை விதவையாக இருப்பதாகவும் அவருக்கு தங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக பச்சையப்பணிடம் இருந்து ஆன்லைன் மூலமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
மேலும் செந்தில் பிரகாஷ் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக கடந்த 02-03-2022 ம் தேதி கனடாவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார் பச்சையப்பன்.
அப்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் பச்சையப்பன் தங்கி இருந்துள்ளார்.
அவரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு செந்தில் பிரகாஷ் தனது தங்கை ராஜேஸ்வரிக்கு பரிசு பொருட்கள் வாங்கி வைத்திருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள வருமாறு கூறியதாகவும் சொல்லி பச்சையப்பனை நேரில் சந்தித்து பரிசுப் பொருட்களை தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார் செந்தில் பிரகாஷ்.
மேலும் பச்சையப்பன் இடம் இருந்த ரூ 3,60,903 மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு மிரட்டிவிட்டு சென்றதாகவும் இதனால் பயத்தில் கனடா புறப்பட்டு சென்றுள்ளார் பச்சையப்பன்.
மீண்டும் 23.04-22 ஆம் தேதி சென்னை வந்து 24.04 22ம் தேதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் செந்தில் பிரகாஷ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.