#Breaking ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ… திடீரென கேட்ட வெடி சத்தம்!

Fire

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ பற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கல்லீரல் சிகிச்சை பிரிவு உள்ள கட்டிட வளாகத்தில் தீ பற்றியுள்ளது. இதனால், அந்த அறையில் இருந்து புகை மளமளவென வெளியேறியது. இதனால், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைவரும், கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சிக்கியுள்ள நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்த கட்டிடத்திற்குள் 4 நோயாளிகள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீப்பற்றியுள்ள கட்டிடத்திற்குள் இருந்து வெடி சத்தம் கேட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவத் தொடங்கியதுமே, நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், சிலர் மட்டும் உள்ளே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை அறையில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தீயணைப்புத்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *