தஞ்சை தேர் விபத்து.. இரங்கல் தெரிவித்த குடியரசுத் தலைவர்..

தஞ்சை மாவட்டத்தில் உள்ள களிமேடு அப்பர் கோவில் திருவிழாவில்  நேற்று நள்ளிரவு  உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில்  மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த துயர சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் பதிவிட்டுள்ளார். 

அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில்: 

தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *