பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட வேண்டும் – ராணுவ தலைமை தளபதி வேண்டுகோள்..

இந்திய ராணுவத் தலைமை தளபதி பதவியில் இருந்த மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஓய்வு பெறும் நிலையில் அவர் நாட்டின் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது:

பாகிஸ்தானுடன் நல்லுறவை காக்கவே இந்தியா எப்போதும்  விரும்புகிறது என இந்திய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். அதற்கு பாகிஸ்தான் முதலில் தீவிரவாதத்தை கைவிட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நடக்காமல் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் சிறிய சம்பவங்கள் தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக பெரிய அளவிலான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

இந்த அமைதி எப்போதும் வேண்டும் என நான் விரும்புகிறேன். பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவை காப்பது எங்களின் கடமை. ஆனால், அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கு முதலில் தங்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வகையில் தீவிரவாதத்தை கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு சாத்தியப்படும் என கூறினார். 

இது தவிர காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச தளங்களில் எழுப்பும் போக்கையும் பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்றார். மனோஜ் முகுந்த் நரவனே ஓய்வு பெரும் நிலையில்  இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நாளை பதவியேற்க போகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *