இலங்கையை விட்டு இனி யாரும் வெளியேற முடியாது – இலங்கை புலனாய்வு பிரிவு..!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை காரணமாக அந்நாட்டில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை தொடுத்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதை எதிர்த்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இலங்கை  வாழ் தமிழ் மக்கள் அங்கு  வாழ முடியாமல் கடல் வழியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் செல்வோரை கண்டறிய இலங்கை அரசு புலனாய்வு பிரிவினர் குழுவை அமைத்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க மூன்று குழுக்கள் கொண்ட அமைப்பை இலங்கையில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்  போன்ற மாவட்டங்களில் இருந்து இலங்கை மக்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்வதாக தெரியவந்த நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவு அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறது. இது தவிர மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு போன்ற குழுக்களும் இதற்காக களமிறக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இதுவரையில் சுமார் 80 பேர் சட்டவிரோதமாக கடல் வழிகளில் இந்தியாவுக்கு தப்பிச் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதை தடுக்கவே இந்த முறை இந்த இலங்கை அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *