எனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மை – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்..!!
உலகம் முழுக்க கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கம் தற்போது தான் குறைத்து. இந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என உலக மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தனக்கு கொரோனா தொற்று உள்ளது உண்மைதான் என உறுதி செய்துள்ளார்.
தற்போது லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது மைக்ரோசாப்ட் நிறுவனம் கொரோனா தொற்று நோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
குறிப்பாக ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு இந்த அமைப்பு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை போன்ற மருந்துகள் வழங்க இதுவரை சுமார் 120 மில்லியன் டாலர் செலவழிப்பதாக கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பலருக்கு வேதனை அளித்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் அவர் தெரிவித்துள்ளார். நான் மீண்டும் நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என தெரிவித்தார். பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.