அமைச்சர் வீடுகளில் பதுக்கப்பட்ட பெட்ரோல், டீசல்..!!! அடித்து நொறுக்கிய இலங்கை மக்கள்..!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்து பொருட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதன் காரணமாக ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்த நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. சமீபத்தில் ராஜபக்ச வீடு தீ வைக்கப்பட்ட நிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடுகளை மக்கள் சூறையாடி தீ வைத்து அழித்தனர்.
அதை தொடர்ந்து சனத் நிஷாந்த, குருநாகல் மேயர் மாளிகை, ராஜபக்சே பெற்றோர் கல்லறை என சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுமக்கள் நாசம் செய்துள்ளனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடிய துடன், வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். நாளுக்கு நாள் இலங்கையில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.
இந்நிலையில் தீ வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர நூற்றுக்கணக்கான யூரியா மற்றும் நெல் மூட்டைகளும் உள்ளதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் இதையும் சூறையாடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.