அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு கலாச்சாரம்..!! இதுவரை 16 பேர் உயிரிழப்பு..!!

நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொரந்து அமெரிக்காவில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை தொடர்ந்து கலிஃபோர்னியா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார்.  

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  நபரை  அங்கிருந்த பொதுமக்கள்  சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றி  போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து டெக்சாஸ் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர்.

இரு தரப்பிற்கு இடையே நீடித்து வந்த மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் கையகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்களில் 16 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ள நிலையில் அமெரிக்கா மக்கள் பொது இடங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *