இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5ஜி அலைவரிசை சோதனை களத்தை சென்னை ஐஐடியில் தொடங்கி வைத்து பேசிய போது இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறினார்.
இந்த நிலையில் மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை தனது செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து அவர் பரிசோதித்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்னவ் இது பிரதமரின் கனவு என கூறினார்.
அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வர வேண்டும் என்று மோடி விரும்பினார். இது இந்திய உலகத்துக்காக உருவாக்கிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்தியா முழுவதும் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பி.டி.வகேலா என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட் தரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நடைபெற இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.