குவாட் நாடுகள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 24 அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவில் நடைபெற உள்ள குவாட் நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த நிலையில் அந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிர்ஷிதா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பில் உக்ரைன் போர் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடியை டோக்கியோவில் நேரில் சந்திக்கும் அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் ஒரு முறை இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி ரஷ்யா மீது தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பாதுகாப்பு விவகாரங்களில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக  கூறுகின்றனர்.

ஜப்பான் நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் டோக்கியோவில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் அவரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *