நிதி அமைச்சராக பொறுப்பேற்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க..

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக  பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி  வருகிறது.

போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில் இலங்கை  பொது சொத்துக்களை  சேதபடுத்தியதோடு  மட்டும்  இல்லாமல் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைத்து கொளுத்தினர். இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார். இவரைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இவரை தொடர்ந்து நான்கு  புதிய அமைச்சர்கள் அதன்பின் ஒன்பது அமைச்சர்கள் பதிவு ஏற்றனர். 

பிரதமர் ரணில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் - Pakalavan News

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 

அதன்படி இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய நிதி அமைச்சராக ரணில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறைக்கும் விதமாக கடந்த வாரம் தமிழக அரசின் மூலம் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *