பிரபல பின்னணி பாடகர் கே.கே  மரணம் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே அவர்கள் மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கே.கே நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்ற போது காலமானார்.

53 வயதான கே.கே தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பே 3,500-க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களை இவர் பாடியுள்ளார். அதன் பின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் காதல் தேசம் திரைப்படத்தின் பாடல்களை பாடியவர்.

அதன் பின்  மின்சார கனவு, உயிரோடு உயிராக, செல்லமே, காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல படங்களில் இவரின் பாடல் அனைவருக்கும் விருப்ப  பாடலாக அமைந்தது. 90 களின் ராஜாவாக இருந்த இவர் 1999-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

இவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மண்ணை விட்டு மறைந்தாலும், இசை பிரியர்கள் பேவரிட் ஹிட் லிஸ்ட் இடம்பெற்றிருந்த பாடல்களின் வாயிலாக கே.கே. வும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவார். சுவாசிப்பது போன்று பாடுவதை நேசித்த கே.கே தனது இறுதி மூச்சு வரை பாடலை பாடியபடி மறைத்துள்ளார் என வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக  இருக்கிறது என்றும் உயிரின் உயிரே பிரிந்து விட்டதாக உணர்கிறேன் என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *