கார்பன் கழிவுகளுக்கு வளர்ந்த நாடுகள் தான் காரணம் – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி மண்ணை காப்போம் என்ற இயக்க விழாவில் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக உள்ள போதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் அரசு பல திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு செயல்பட்டு வருகிறது. கரியமில வாயு வெளியேற்றத்திற்கு வளர்ந்த நாடுகளே மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்த நாடுகளே பூமியின் வளங்களை அதிகளவு சுரண்டி வருகிறது. பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக உள்ள போதும் உள்ளது. 

பூமிக்கு காய்ச்சல்

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். பெட்ரோலில் பத்து சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை இந்தியா தான் முதலில் செயல்படுத்தியது என்றார்.

மண்ணின் நலம் குறித்தும் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டைகள் வழங்குவதற்கு மிகப்பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *