ஒரு கிராமத்திற்கே தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ் பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்ரீமந்துடு’ படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆந்திராவில் புர்ரேபாலெம் மற்றும் தெலங்கானாவில் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை மகேஷ் பாபு தத்தெடுத்துள்ளார்.

மேலும், ’ஹீல் எ சைல்ட்’ என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து இதுவரை 1000 குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும் தனது தந்தையுமான கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புர்ரேபாலெம் கிராமத்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில் பலரும் மகேஷ் பாபுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *