ரவுடி பேபி ஆக மாறிய ஹன்சிகா!
ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். முதலில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழில் தனுஷின் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் எங்கேயும் எப்போதும், வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை, சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் வில்லன் என்ற திரைப்படத்தின் மூலம் கால்பதித்தார்.
எப்போதும் சுட்டி தனமாக இருக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி தற்போது படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கதாநாயகிகளை ஹன்சிகா மோத்வானி ஒருவராக இருக்கிறார். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘ரவுடி பேபி’ என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித் து இருக்கிறார். படத்தில் அவர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரு உயிரை காப்பாற்றும் உன்னதமான கதாபாத்திரத்தை நடித்து இருக்கிறார் நடிகை ஹன்சிகா.
இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா உடன் இணைந்து நடிகர் சத்யராஜ், ராம்கி, மீனா, சோனியா அகர்வால், ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்க ஜே.எம் ராஜா சரவணன் டைரக்டு செய்கிறார். இந்த திரைப்படத்திற்கு ராசாவை கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். படத்தைப் பற்றி ராஜா சரவணன் கூறும்போது ‘தாய்மைக்கு எல்லை ஏது தாயாய் மாறும்போது’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதையை அமைத்து உள்ளோம் என்று கூறினார்.