சூர்யாவால் கண்கலங்கிய நடிகர் கமல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஒருவராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசானது, ஜெய் பீம் திரைப்படம். தனது 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா.
இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமொள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜெய்பீம் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பற்றி உலகநாயகன் கமலஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படதை பற்றிய கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக இயக்குனர் வெளிப்படுத்தி இருக்கிறார்.