நடிப்பில் இருந்து புதிதாக துணி கடை ஆரம்பித்த வனிதா!
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா. தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர்களான மஞ்சுளா மற்றும் விஜயகுமார் தம்பதிகளின் முதல் மகளான வனிதா விஜய் குமார், தனது சிறு வயதில் தளபதி விஜய் உடன் ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். பின்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக போட்டியில் இருந்து வேளியேறினார்.
மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பொதுவாக நடிகைகள் மற்ற ஹோட்டல், ஆடை அலங்காரம் போன்ற மற்ற தொழில்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமாரும் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார் வனிதா.