பா.ரஞ்சித்தின் பதிவால் கடுப்பான கெளதம் வாசுதேவ் மேனன்!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அடுத்ததாக மெட்ராஸ் எனும் திரைபடத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இவர் இயக்கத்தில் உருவான அட்டகத்தி, மெட்றாஸ், கபாலி, பரியேறும் பெருமாள், காலா போன்ற பல வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் பா.ரஞ்சித் தற்போது டுவிட்டரில் அன்பு செல்வன் திரைப்படத்தின் முதல் லுக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை வினோத் இயக்க, செவென்ட்டி எம் ஸ்டுடியோஸ் தயாரிக்க, பத்மயன் இசையமைத்து உள்ளார். இந்த முதல் லுக் போஸ்டரில் கெளதம் வாசுதேவன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த முதல் லுக்கை பார்த்த கெளதம் வாசுதேவ் மேனன், இதற்கு பதிலளிக்கும் வகையாக ஒரு டூவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் இந்த போஸ்ட்டரை பார்க்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் நடிக்காத, ஏனக்கு தெரியாத ஒரு படத்தின் போஸ்டரில் எனது புகைப்படம் உள்ளது. போஸ்டரில் இருக்கும் இயக்குனர் யார் என்று கூட எனக்கு தெரியாது. இந்த பதிவை பதிவிட படத்தின் தயாரிப்பாளரின் கைவசம் ஒரு பெரிய இயக்குனர் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மாரியான நிகழ்வுகள் தற்பொழுது சுலபமாக நடக்கிறது என்று கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *