பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை, காரணம் இதுதான்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்-2. இந்த சீரியலின் முக்கிய நாயகியாக நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு இதையெல்லாம் ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர். இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் நிஜத்திலும் ஜோடி ஆக்கிக் கொண்டார்.
சரவணன் மீனாட்சியை தொடர்ந்து பல சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் ரட்சிதா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். காரணம் அவர் இந்த சீரியலில் ஹோம்லி லுக்கில் தோன்றி அவரின் உண்மையான பெயரை ரசிகர்கள் மறந்து போகும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்-2 யில் இருந் விலகுவதாக பல தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து இந்த செய்தியை உணர்த்தும் வகையில் ரசித்ரா சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
கன்னட சினிமாக்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்காகத்தான் அவர் தமிழ் சீரியலில் இருந்து விலகுகிறார் என்றும் கூறப்பட்டது. தவிர, கொஞ்ச நாட்களாகவே நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளே பெருவாரியாக வருவதாலும், இதில் தனக்கான ஸ்கோப் இல்லை என்றும் ரச்சிதா கருதியதால் தான் அந்த சீரியலில் இருந்து அவர் விலகினார் என்ற வதந்தியும் ஒரு புறம் உலா வந்தன.
இந்த நிலையில் தான், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மஹா. அந்தப் பெயரைக் பதிவில் குறிப்பிட்டு ‘பை மஹா’ என அதிகாரபூர்வமாக தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.