நானும் மனுஷிதான்- சமந்தா!

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா மீண்டும் தீவிரமாக பல படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். டாப்ஸி தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. விவாகரத்து தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்த நாக சைதன்யாவின் புகைப்படங்களை சமந்தா நீக்கியுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகை சமந்தா சமீபத்தில் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் ” உங்கள் மகளை திருமணம் செய்து கொள்வார்களோ என்று கவலைப்பட வேண்டாம். அவளைத் திறமையானவராக தயார் செய்யுங்கள். திருமணத்திற்கு பணம் சேர்ப்பதற்கு பதிலாக அவளது படிப்புக்கு செலவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

தெரியாமலோ இந்த நிலையில் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், நான் வலிமையானவள், எதையும் தாங்கிக் கொள்பவள், நான் சரியானவள் அல்ல, எனக்கு நான் சரியானவள். நான் பின்வாங்க மாட்டேன், நான் அன்பானவள், நான் உறுதியுடன் இருக்கிறேன், நான் தீவிரமானவள், நான் மனுஷி, நான் ஒரு போராளி, எனது அம்மா கூறினார் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *