இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்… ஜெய்பீம் குறித்து திருமா!

Thiruma

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இருளர் பழங்குடியினர் இந்த சமூகத்தாலும், காவல்துறையாலும் எப்படி அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்பதை விளக்கமாக வெளிக்கொணரும் விதமாக படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டது பாராட்டுக்களை குவித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக நாயகன் கமல் ஹாசன், இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் ஜெய்பீம் படம் குறித்த தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது ஜெய்பீம் திரைப்படம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் – அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *