’புனித் ராஜ்குமார் இறந்தது எனக்குத் தெரியாது’- ரஜினி கண்ணீர்

பிரபல கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இறந்த தகவல் தனக்கு இரண்டு நாட்களுக்கு பின்னரே தெரியும் என்றும் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உறவினர்களும் மருத்துவர்களும் அத்தகவலை தன்னிடமிருந்து மறைத்துவிட்டதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினி தந்து ட்விட்டர் பக்கத்தில் கண்ணீருடன் பதிவிட்டிருக்கிரார்.

கடந்த மாதம் 29ம் தேதியன்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தன்னுடைய 46 வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவை ஒட்டி முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் அனைவரும் பெங்களூருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவரான அவருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தன்னிடம் புனித்தின் மரணச் செய்தி மறைக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்ட ரஜினி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி தற்போது குணமடைந்து வருகிறேன்.

புனித் ராஜ்குமார் இறந்த செய்தி எனக்கு இரண்டு நாட்கள் கழித்துதான் தெரிந்தது.

என் கண் முன் வளர்ந்த குழந்தை அவர். பெயர் புகழ் என கன்னட சினிமாவில் உச்சத்தில் இருந்தவர், அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இன்னும் ஒரு சில தினங்களில் பெங்களூரு சென்று ராஜ்குமார் குடும்பத்தினரை சந்திக்கச்செல்வார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *