வடிவேலு சார் பாராட்டியதும் தான் நடிகனானதை உணர்ந்தேன்!

நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார்..இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.யோகி பாபு,வினய்,ஜாரா அர்ச்சனா,வினய்,தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

பிரியங்கா மோக இந்த படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்தார். ஏற்கெனவே ‘கோலமாவு கோகிலா’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும் ‘டாக்டர்’ திரைபடத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது மட்டும் இல்லாமல் பாலா மீம்களிலுக்கும் பேசப்பட்டு வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் பிரதான காமெடியனாக நடிக்க ஒப்பந்தமானேன். ஆனால், அப்படம் நிறுத்தப்பட்டதால் என்னுடைய பழைய வேலைக்குத் திரும்பிச் சென்றுவிட்டேன். ஒவ்வொரு வருடமும் நெல்சன் என்னைத் தொலைபேசியில் அழைத்து அவருடைய படத்துக்காக என்னுடைய சமீபத்திய புகைப்படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்பார். எப்படியோ எனக்குள் ஒரு நடிகர் இருப்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கிறார்.ஆனால், நடிகனாக நான் அங்கீகாரம் பெற்றதாக உணர்ந்தது வடிவேலு சாரைச் சந்தித்த போதுதான். ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அவரைச் சென்று சந்தித்தேன். என்னுடைய எல்லா காமெடிகளையும் பார்த்திருப்பதாகவும், நான் நன்றாக நடிப்பதாகவும் வடிவேலு சார் பாராட்டினார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *