வயதில் சிரியவரை திருமணம் செய்துகொண்ட பாடகி மாளவிகா!
தமிழில் மக்களிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப் சிங்கர் நிகழ்ச்சி நல்ல வரவேப்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெட்ரா அனைவரும் திரைத்துறையில் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் பாடகி மாளவிகா. மாளவிகா தமிழில் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மனம் கொத்தி பறவை’ திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டும் இல்லமால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் 100 பாடலுக்கு மேல் பாடியள்ளார். சமுக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆகா இருக்கும் மாளவிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் எனது 33 வருட வாழ்க்கையில் சரியான காதலை கண்டெடுத்தேன் என்று பதிகிவிட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் என்று சென்னையில் புயலில் இருக்கும் போது திருமணம் செய்துகொண்டார்.
பாடகி மாளவிகா தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமனை சென்னையில் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் அடைமழைக்கு இடையே, கோலாகலமாக நடைபெற்ற மாளவிகா – அஸ்வின் காஷ்யப் ரகுராமன் திருமண விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாளவிகா – அஸ்வின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடகி மாளவிகாவை திருமணம் செய்துள்ள தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமன் மாளவிகாவை விட இளையவர் என்பது தெரியவந்துள்ளது. தன்னைவிட வயதில் இளையவரை திருமணம் செய்துகொண்டுள்ள மாளவிகாவின் மகிழ்ச்சி பொங்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.