ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… கண்ணீர் விட்டு அழுத சிம்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தீபாவளி அன்று மாநாடு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி என்ற மனப்பான்மையுடன் படத்தை வெளியிட விரும்பவில்லை என அறிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நவம்பர் 25ம் தேதி அன்று படம் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, யுவன், எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் பேசிய சிம்பு, “ ரொம்ப பிரச்னை கொடுக்குறாங்க.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது ரசிகர்கள் அரங்கமே அதிரும் வகையில் ‘எஸ்டிஆர், எஸ்டிஆர்’ என முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *