புதிய படங்களில் நடிக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்!

ரஜினிகாந்த் நடித்த தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரஜினி காந்த் புதிய படங்களில் நடிக்க தயாராகவும் மாதம் இறுதியில் தொடங்க படலாம் என்றும் தகவல்கள் பரவி உள்ளது.சமீபத்தில் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

தற்போது பூரண குணமடைந்து அடுத்து படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் இவர் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டி தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த டாக்டர், பிஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் லிஸ்ட் படப்பிடிப்பு முடியாததால் ரஜினி படத்தை உடனே தொடங்குவது முடியாத காரியம் என்கின்றனர். பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தகவலும் பரவி வருகிறது. ரஜினியின் புதிய திரைப்படம் மற்றும் இயக்குனர் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *