விழாவில் மன்னிப்பு கேட்ட ராஜ மவலி!

பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து ராஜமவுலி இயக்கிருக்கும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. ரத்தம் ரணம் ரவுத்திரம். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்து முடிந்தது. அந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ராஜமவுலி பேசினார். அதில் அவர் நான் இரண்டு விசயங்களுக்கு இந்த மேடையில் நான் இரண்டு விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தனக்கு தமிழ் பேச தெரியவில்லை என்பதற்காகவும் மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தற்போது சரியான பதில் அளிக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ராஜா மவலி கூறினார். மேலும் தான் அடுத்த மாதம் பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், ஒவ்வொரு சண்டை காட்சிகளுக்கும் பின்னால், உணர்ச்சிகரமான கதை இறக்கும். அதுதான் இந்த படத்தின் ஜீவநாடி. படத்தின் மொத்த ஆன்மாவும் பாடல்களில் இருக்கிறது. பாடல்களை கேட்ட போதே மதன்கார்க்கி கண்ணீர் சிந்தினார். தமிழில் அவர் அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். அதை இன்னும் உலகுக்கு காட்டவில்லை என்று ராஜ மவலி பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *