தொடர்ந்து தள்ளி போகும் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

முதலில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு செல்வராகவனும், தனுஷும் வேறு சில ப்ராஜெக்டில் பிசியாக இருந்ததால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. மீண்டும் டிசம்பர் மாத இறுதியில் சூட்டிங் ஆரம்பிக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜனவரி மாதத் துவக்கத்தில் சூட்டிங் துவங்கும் என்று கூறி உள்ளனர்.

தனுஷ் டுவல் ரோலில் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் பிகில் பட பிரபலம் இந்துஜா ரவிசந்திரன் மற்றும் மகாமுனி திரை பிரபலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஆற்றங்கி ரே. இதில் அக்ஷய் குமார், சாரா அலி கானுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *