தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைத்தேன்!

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாக ரத்து செய்வதாக அறிவித்து தற்போது திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்களை பரவி வந்தன. பலர் நடிகை சமந்தா மீதும் பழி சுமத்தினர்.

இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். இந்தநிலையில் விவாகரத்தினால் மனமுடைந்து இழந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சமந்த அளித்துள்ள பேட்டியில், மனதளவில் நான் மிகவும் பல வீனமானவள். விவாகரத்து செய்து பிரிவதால் மனமுடைந்து இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.

ஆனால் நான் எவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவர் என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது வலிமை எனக்குத் தெரிந்து உள்ளது. நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *