புஷ்பா படத்திற்கு தடை கோரிய ரசிகர்கள்!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இன்று கர்நாடக மக்கள் புஷ்பா படத்திற்கு தடைகோரி ட்விட்டரில் BoycottPushpaInKarnataka என்ற ஹேஷ்டேக்கை என்ற வைரலாகி வருகின்றனர். இதற்கு காரணம் கர்நாடகாவில் வெளியாகும் புஷ்பா படத்தை கன்னட மொழியில் டப் செய்தி வெளியிடாமல் தெலுங்கு மொழியில் நேரடியாக ரிலீஸ் செய்வது தான் காரணம்.
மத்த மொழிகளான மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் அந்தந்த மொழிகளில் டப் செய்து வெளியிடபடுவது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்தில் பாடல்கள் டிரெய்லர்கள் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது