பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மான் கான்!
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தனது 55-ஆவது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதனிடையே இன்று காலை சல்மான் கானை அவரது தோட்டத்தில் வைத்து விஷமற்ற பாம்பு கண்டித்துள்ளது. சல்மான் கான் தனது பிறந்தநாளை வழக்கமாக தனது பிறந்தநாளை பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
பண்ணை வீட்டில் உள்ள விவசாய தோட்டத்தில் அதிகாலை விஷமற்ற பாம்பு கடித்ததை தொடர்ந்து சல்மான் கானை அருகில் உள்ள MGM மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு ஒரு மணி நேரம் பார்வையில் வைக்கப்பட்டு பின்பு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாம்பு சல்மான் கானின் கைகளில் கடித்துள்ளது என்றும் தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள். பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கப்பட்டு சிறிது நேரம் கண்காணிக்கப்பட்டு பின்பு வீடு திரும்பியுள்ளார் சல்மான் கான். சல்மான் கான் வழக்கமாக தான்பிறந்தநாளை பண்ணை வீட்டில் கொண்டாடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்று இரவு அங்கு பார்ட்டி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த பண்ணைவீட்டின் புகை படங்களை சல்மான் கான் பகிர்ந்துள்ளார். மேலும் அங்கு சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் இருவரின் பாடல்களும் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான் ‘பதன்’ என்ற ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் கத்ரீனா உடன் இணைந்து ‘டைகர்-3’ படத்திலும் நடிக்க உள்ளார். நடிகை பூஜா ஹெட்ஜ் உடன் இணைத்து ஒரு படம், ஜாக்குலினுடன் ஜோடி சேர்ந்து ஒரு படம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.