ராக்கி இயக்குனருடன் இணையும் தனுஷ்!
தனுஷ் இந்தியில் நடித்த அந்த்ராங்கி ரே படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்திலும், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம், செல்வராகவனின் நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முதல் தடவையாக தெலுங்கு படமொன்றிலும் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு வாத்தி என்று பெயர் வைத்துள்ளனர். இது தமிழிலும் வெளியாக உள்ளது. இந்த படங்களுக்கு பிறகு சாணி காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கி உள்ள அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்யும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்த தகவலை தனுஷ் தற்போது உறுதி செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் ஆமாம் உங்களுடைய யூகங்கள் உண்மைதான். அருள் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் அதிர்ஷ்டசாலி நான் தான். மற்ற தகவல்கள் விரைவில் என்று கூறியுள்ளார்.