பிரபல நடிகைக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து பிரபல நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இன்னும் சில நடிகர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையும் தாண்டி சில நடிகை, நடிகர்களுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிக்கையில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு திடீரெண்டு லேசான தலை வலி, இருமல் இருந்ததாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை தனது சமூகவலைத்தளத்தில் மூலம் ஒரு பதிவுடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் அனைவரையும் பாதுகாப்பாகவும் வீட்டிலேயே இருங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இருப்பதாகவும், மேலும் தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் சர்க்கார் வாரி பட்டா என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மைதான், ஆச்சாரியார் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.