பலவருடங்கள் கழித்து திரையில் இணையும் மம்மூட்டி-மோகன்லால்!
மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் மோகன் லால் மற்றும் மம்மூட்டி, இணைந்து பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து, மலையாள நடிகர் சங்கத்தின் நிதிக்காக மலையாள திரையுலகினர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் டுவென்டி டுவென்டி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அது மட்டும் இல்லாமல் மோகன்லால் மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் சாதனை படைத்தது மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர்கள் கூட்டணி பல வருடங்கள் களைத்து தற்போதிது மீண்டும் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கும் ஆந்தாலஜியில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த ஆந்தாலஜியின் கதைகள் அனைத்தும் எழுத்தாளர் எம் டி வாசுதேவன் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட உள்ளன. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பிரியதர்ஷன், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோர் இந்த ஆந்தாலஜியை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.