கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா நடிகர் மம்மூட்டி?
மலையாள திரையுலகில் உச்சநட்சரத்தில் உள்ளவர் நடிகர் மம்மூட்டி. இவர் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் சி.பி.ஐ.-5 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சேதுராமன் ஐயர் என்னும் சி.பி.ஐ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் புகைப்படத்தை சமீபத்தில் மம்மூட்டி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து கொண்டிருந்த மம்மூட்டி அவர்களுக்கு திடீரென்று உடல் நலம் குறைவாகி உள்ளது. பரிசோதனையில் இவருக்கு கொரோனா பாதிப்பு என்று உறுதியாகி உள்ளது. மேலும் இவர் வீட்டிலேயே தனிமை படுத்த பட்டுள்ளாரா இல்லை மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் போன்ற ஏந்தவிதமான தகவல்களும் வெளியாக வில்லை.
மேலும் மம்மூடிக்கு கொரோனா என்ற செய்தியை, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் மம்மூட்டியின் உடல் நலம் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை மம்மூட்டியிற்கு கொரோனா என்ற செய்தியை மம்மூட்டியோ அல்லது அவரின் மகன் துல்கர் சல்மானோ உறுதி படுத்தவில்லை. இதனால் தற்போது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.