ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

முன்னாள் இந்தியன் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், எல்லா விதமான கிரிக்கெட் விளையாட்டுகளையும் விளையாடி உள்ளார். சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக திகழ்ந்த இவருக்கு 2012 ஆம் ஆண்டு, யுவராஜுக்கு இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியன் பிரீமியம் லீக் விளையாட்டில் 2014-ஆம் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன் பின் 2015-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில் 16 கொடியிற்கு யுவராஜ் சிங்கை ஏலத்திற்கு எடுத்தது. 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுவராஜ் சிங் உலக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

யுவராஜ் சிங் 2015-ஆம் ஆண்டு ஹாசில் கீச் என்பவரை மணமுடித்தார். இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள சாட்டர்பூரில் வசித்து வருகிறார்கள். தற்போது இந்த தம்பதியர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *