ஜீவா படத்தை இயக்கும் சுந்தர்.சி!

இயக்குனர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில், நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரான அரண்மனை-3 படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக திரையரங்குகளில் வெளியிட்டிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது சுந்தர் சி மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, பிக் பாஸ் ஐஸ்வர்யா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை பற்றிய இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. பெயரிடாத இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஊட்டியில் நடக்க உள்ளது. இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. பூஜையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.