10 ஆண்டுகளை எட்டிய சிவகார்த்திகேயன்!

ஒரு தொகுப்பாளராக தனது திரையுலக பயணத்தை துவங்கி தமிழ் சினிமா துறையில் தனகென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். முதலில் தொலைகாட்சியில் பணியாற்றி பின்பு வெள்ளித்திரையில் கதாநாயகர்களின் நண்பனாக நடித்து மெரினா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்பு, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, கானா , மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. தொடர்ந்து இவர் அயலான் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். சிங்கப்பாதை, SK 20, SK 21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்றுடன் சிவகார்த்திகேயன் திரைத்துறையில் 10 ஆண்டுகளை கடக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன், “நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு துவங்கிய இந்த பயணம், இன்று உங்கள் இல்லங்களிலும், இதையங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்துக் கூட பார்த்திராத நிஜம்”.

மேலும் என் தாய் தமிழுக்கும், என்னை சகோதரனாக, மகனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்ப காலம் முதல் என்னுடைய வெற்றி- தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதிரிகளுக்கும் பெரும் நன்றி என தெரிவித்து இருக்கிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *