என்னை பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் சதி-நடிகர் திலீப்!
நடிகை பாவனாவின் கடத்தல் வழக்கில் சிக்கிய மழையால நடிகர் திலீப் மீது விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டம் திட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திலீப் கேரளா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிமன்றம் உத்தரவின் பேரில் தனது 3 செல்போன்களை கோர்ட் பதிவாளரிடம் ஒப்படைத்தார்.
இந்த வழக்கிலும் திலீப் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் திலீப் கேரளா உயர் நீதி மன்றத்தில் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரியை கொல்ல சாதித்திட்டம் திட்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும், சட்டத்தை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், என்மீது பதிவு வலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்க பட்ட நடிகை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகுமார், இந்த வழக்கில் நடிகையையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் இந்த வழக்கில் நீதி மன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் நடிகை தரப்பிலும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.