எளிமையாக வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பொதுமக்களை போல் திரையுலக பிரபலங்களும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், காலையில் இருந்து நடிகர் விஜய், அருண் விஜய், உதயநிதி ஸ்டாலின் போன்ற பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமைகளை ஆற்றி வந்தார்கள். தற்போது அவர்களை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஏரியாவுற்கு உட்பட்ட வாக்கு சாவடியில் மக்களோடு மக்களாக மிகவும் எளிமையான முறையில் தனது வாக்குகளை பதிவு செய்தார்.

ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘இரண்டாம் திட்டம்’. இந்த திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதை தொடர்ந்து இவர் துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, மோகன்தாஸ் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *