இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நடிகை!

மலையாளத்தில் பிரபலமான நடிகை அஞ்சலி நாயர். இவர் தமிழில்,நெல்லு,கோட்டி,உன்னையே காதலிப்பேன்,இதுவும் கடந்து போகும்,நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த பெண், புலிமுருகன்,திரிஷ்யம்-2 ஆகிய படங்களில் அஞ்சலி நாயரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அஞ்சலி நாயர் ஏற்கனவே அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தை உள்ளது.பின்னர் கணவருடன் அஞ்சலி நாயருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.இதையடுத்து மலையாள படங்களில் உதவி டைக்டராக பணியாற்றி வரும் அஜித் ராஜி என்பவருடன் அஞ்சலி நாயர் நெருக்கமாக பழகுவதாக தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில் அஜித் ராஜூவை அஞ்சலி நாயர் 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை அஜித் ராஜு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் அஞ்சலி நாயருக்கு, நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *