‘எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர் ரீலிஸ் தேதி அறிவிப்பு!

ஜெய்பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அனுமோகன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து வினை ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இமான் இசை அமைத்திருக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் பல பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசரும் வெளியானது. தற்போது வருகிற மார்ச் 2-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.