நாளை வெளியாகிறது ‘எதற்கும் துணிந்தவன்’ ட்ரைலர்!
சூர்யா நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அனுமோகன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து வினை ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ். பாஸ்கர் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இமான் இசை அமைத்திருக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் பல பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசரும் வெளியானது. சமீபத்தில்தான் சன் பிச்சர்ஸ் நிறுவனம் மார்ச் 2-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். தற்போது நாளை வெளியாகவிருக்கும் ட்ரைலருக்கு படக்குழுவினர் போஸ்டருடன் கூடிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் நாளை வெளியாகும் ட்ரைலருக்கு ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.