‘விரைவில் வருகிறான்’ என்ற பதிவை இட்ட தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய படங்ககள் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 10ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இதற்க்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, மற்றும் மயக்கம் என்ன. தற்போது நான்காவது முறையாக ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து இந்துஜா ரவிசந்திரன், சுவீடனை சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்துகொண்டிருந்த வேளையில், செல்வராகவன், தனுஷ், மற்றும் கதாநாயகி எல்லி அவ்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வந்தது. தற்போது டுவிட்டரில் நடிகர் தனுஷ் நானே வருவேன்’ படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் வருகிறான் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.