விமல் பேசிய ஆடியோ பதிவால் சர்ச்சை!
பசங்க, களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான விமல் மன்னர் வகையறா படத்தில் நடித்தபோது தன்னிடம் ரூபாய் 5 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் கோபி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுபோல் தயாரிப்பாளர் சிங்காரவேலனும் விமல் மீது புகார் கொடுத்தார்.
தற்போது ஹேமா என்ற பெண்ணும் மோசடி புகாரை அளித்துள்ளார். இந்த நிலையில் விமல் தயாரிப்பாளர்கள் கோபி, சிங்கார வேலனிடம் மன்னிப்பு கேட்பது போன்றும், வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவதாக பேசும் ஆடியோ வலைத்தளங்களில் வெளியானது. இதற்க்கு பதிலாக விமல் புதிய ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ஆடியோவை கேட்டு நான் அதிர்ச்சியானேன். இது இரண்டரை வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்னை மிரட்டிய ஒரு விரக்தியில் பேசி அனுப்பிய ஆடியோ. அந்த ஆடியோவை இன்று நான் பேசியது போல் சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது என்னை மிரட்டும் போது போட்ட ஆடியோ. அதை இப்போது வெளியிட்டு திசை திருப்புகிறார்கள். இதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். தற்போது இந்த இரண்டு ஆடியோக்களும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.